Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Saturday, June 25, 2011

காதல் தேவதை



விழியோடு விளையாடும் விளையாட்டு காதலா
     உன் நினைவோடு நிழலோடு வாழ்வது காதலா
தண்ணீர் என் முன்னாடி கண்ணாடி ஆனதே
     பிரதிபளிப்பது என்முகமல்ல உன்முகம்
என் இமை எதிரே உதயமானவள் நீ
     என் இதயத்திலே நுலைந்தவள் நீ
திருமணம் கொள்வோமா இருமனம் சேர்வோமா
     வாழ்வினில் வெல்வோமா சொல் சொல்
உலகம் வென்றாலும் உடமைகள் சேர்ந்தாலும்
     வென்றவள் நீ தானே என் உயிரே
காலம் சென்றாலும் கடமைகள் முடிந்தாலும்
     காதலி நீ தானே என் கனவே
என் விளைநிலத்தில் விளைந்ததெல்லாம்
     பயிர்களல்ல உன் நினைவுகள்தான்
அறுவடை செய்யாமல் ஆசை இழக்காமல்
     காவல் காக்கும் காதலன் நான்
பட்டு புடவை உடுத்தி வந்தாய்
     என் பகல் கனவை நிகழ்த்தி வந்தாய்
விண்ணில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும்
     என் உயிர் உன்னிடம் தான் அன்பே
மன்னன் நான் தானே, என் மகராணியும் நீதானே
     நம் காதல் தேசத்தை ஆழ்வோமா என் அன்பே!

1 comments:

  1. your lover or wife is in happy.
    because an poet get a husband. wishes to your lover or wife

    ReplyDelete

 

வந்து போனவுங்க