Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, October 11, 2011

இதுதான்டா அரசியல்


வர வர நம்ம அரசியல் வாதிங்க அடிக்குற காமெடிக்கு அளவே இல்லாம போய்டுச்சு.பின்ன என்னங்க ஏப்ரல்ல ஒரு பேச்சு அக்டோபர்ல ஒரு பேச்சு பேசுறாங்க. இந்த ஆளும் கட்சியோட கூட்டணி சேர்ந்து ஒரு வருடம் கூட ஆகல அதுக்குள்ள வெளியேறி இப்ப அந்த கட்சியவே விட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்க. இதுல நம்ம கேப்டன் ஆளும் கட்சிய ஆறு மாசத்துக்கு விமர்சிக்கமாட்டோம்னு வேற பேட்டியெல்லாம் கொடுத்தாரு.இப்ப அந்த கூட்டணியே ஆறு மாசம் கூட நிலைக்கவில்லை.அந்த அம்மாவ பத்தி தெரிஞ்சும் இப்படி மாட்டிகுட்டு முளிகுறாரே.ஆளும் கட்சி மெஜாரிட்டில இருக்குறதுனால யாரு கூட்டணியும் தேவையில்லை.தே மு தி க ஒரு புறம் தனியா களம் இறங்க மற்றொரு புறம் எல்லா கட்சியும் இந்த தேர்தல தனியாவே சந்திகுறதுனு முடிவு எடுதுருக்கு.அட நம்ம தி மு க நினச்ச மாதிரியே காங்குரச கழட்டி விட்டுச்சு. போன தேர்தல்ல முட்டி மூக்க ஓடைகாம இருந்த நம்ம பம்பரம்  இப்ப களம் இறங்கிருக்கு, பார்போம் பம்பரம் சுத்துதா இல்ல சாயுதாணு. ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம வி.சி தலைவரும் மாம்பழ தலைவரு ஒன்ன வலம் வந்தாங்க.வி.சி தலைவரு கூட நம்ம ரெண்டு பேரும் ஒன்னாயுடுவோம், அப்ப கண்டிப்பாக நம்ம பலம் இந்த நாட்டுக்கே தெரியும்னு வீர வசனம் எல்லாம் பேசுனாரே அவர யாராது கண்டுபிடிசீங்கன்னா கூட்டணிய பத்தி கேளுங்க.
நம்ப மாம்பழ டாக்டர் (மன்னிக்கணும் மருத்துவர் )அய்யா நேத்து பேப்பர்ல ஒரு பேட்டி கொடுத்திருக்காரு பாருங்க, படிச்ச உடனையே சிரிப்பு வந்துருச்சு.இனிமே  பா.ம.க யாரு கூடையும் கூட்டணி சேராது,சிங்கம் சிங்குலாதான் களம் இறங்கும் அப்படின்னு சொல்லிருகாறு.அவருக்கு எதுக்கு இந்த பேச்சு அடுத்த தேர்தல்ல கண்டிப்பா அந்த பக்கம் போக போறாரு, இதுல வீண் பேச்சு பேசி நம்மல வேற கடுப்பு ஏத்துராறு மை லார்ட் .இதுல இடை தேர்தல் வேற, திருச்சி பாவுங்க எத்தன நாள் தான் இந்த கஸ்டத்தைஎல்லாம் தாங்குமோ.கிருஸ்ணசாமினு ஒருத்தர் இருக்காரு அவர் கட்சில எனக்கு தெரிஞ்சு  ஆயிரம் பேராது இருப்பாங்களாங்குறதே சந்தேகம். ஏன்னா அவர் கட்சியில் அவர் தான் தலைவர் அவர் மட்டும்தான் எம் எல் ஏ. அவரும் ஆளும் கட்சிய திட்ட ஆரம்பிச்சுட்டாரு.சட்டசபை கூட்டம் நடக்குறப்ப முதல்வரை புகழ்ந்து தள்ளுனாரே இப்ப ஏன் இப்படி.
இப்ப தான் நம்ம முக்கியமான  இடத்துக்கே வந்துருக்கோம், தி.மு.க இந்த கட்சி இப்ப பாவபட்ட நிலமைல இருக்கு, தலைவர் பேச்சை கேக்குறதுக்கு ஆளு இல்ல, பிரச்சாரம் பண்றதுக்குகூடஆளு இல்ல அட இது பரவால இடைதேர்தல்ல வேட்பு மனு தாக்கல் பண்றதுக்கே வேட்பாளர் வரலைனா பாருங்களேன்,அய்யா கொஞ்சம் வேலையா உள்ள இருந்தார் அதான் வர முடியல்ல.நேத்து பருதி இளம்வழுதி அய்யாவும் கட்சி பதிவியே வேண்டாம்னு ஒதுங்கீட்டாறு. இன்னும் கொஞ்சம் நாள்ல மிச்ச மீதி இருக்குற மாஜிங்களையும் உள்ள தள்ளாம விட மாட்டோம்னு ஆளும் கட்சி திரியுது.உள்ளாட்சி தேர்தல் நடக்குறது நாட்டுக்கோ இல்ல நமக்கோ இல்லைங்க இந்த கட்சில இருக்குற எடுப்பு துடுப்பு எல்லாம் பொலைக்குற துக்கு தான்.அடுத்த தேர்தல்ல பார்ப்போம் எல்ல கட்சியும் இதே கொள்கையுடனும் வைராக்கியதுடனும் இருபாங்கலானு...    

3 comments:

  1. this is really true.. i accept ur writing

    ReplyDelete
  2. சுவாரசியமான ரசிக்கும் படியான எழுத்து நடை! வாழ்த்துக்கள் நண்பா....

    ReplyDelete

 

வந்து போனவுங்க