Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, April 29, 2012

வா, நீ வா


வா, நீ வா! வா, நீ வா
பார்க்காமல் தவிக்கின்றேன்
விழியே, நான் துடிக்கின்றேன் [வா, நீ வா]
கார்மேக முகிலே, வா
கொங்கு நாட்டு மகளே, வா
நீ இல்லாமல் வாழ்விங்கு இருள்கிறதே
நிலவும் கூட ஒளிரத்தான் மறுக்கிறதே.

[வா, நீ வா]

நீ, பேசும் வார்த்தையெல்லாம்
தேசிய கீதமாய் ஒலிக்கிறதே
நீ, சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புகாரி ராகமாய் கேட்கிறதே
நீ, ஓரப்பார்வை பார்த்தால்
போதும், நட்சத்திரமும் ஒதுங்குமடி
ஒதுங்கி நின்று முடிகோதினாளும்
தென்றல் காற்று வீசுமடி.

 [வா, நீ வா]
  
பாவி மனிதன் தவிக்கின்றேனே
இறங்கி வர மனமில்லையா?
நினைத்து நினைத்து அழுகின்றேனே
பெண்ணே உனக்கு மனமில்லையா?
உள்ளம் முழுதும் வலிக்கிறதே
உன்னை தாங்கி கொள்ள துடிக்கிறதே
மரணமும் கூட மறுக்கிறதே
உன்னுடன் வாழச் சொல்கிறதே... [வா, நீ வா]
 

Monday, April 16, 2012

பறிக்கப்படும் மற்றொரு உரிமை


மேற்கு வங்காள முதல்வரின் தேவையில்லா கைது நடவடிக்கையினால் பல இணையதள நண்பர்கள் கடுப்பாகி உள்ளனர். ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியை மாற்றி முகுல் ராயை நியமித்தார் மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி. இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகளும், கார்ட்டூன்களும் பெரிய அளவில் பரவின.
ஜாதிவ்பூர் பல்கலைகழக வேதியல் பேராசிரியராக உள்ள திரு. அம்பிகேஷ் மகபத்ரா, இது போன்று ஒரு கேலிக்கை சித்திரத்தை மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துகொண்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டி அவர் கைது செய்யபட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு மேற்கு வங்காளம் மட்டுமல்லாது  மற்ற இடங்களிலும் கடும் எதிர்ப்பு பரவியது.
புதிது புதிதாக திட்டங்களை அறிவித்துவிட்டு அது சாத்தியமிலாது போனால் அதிகாரிகளை சாடுவது, தனக்கு ஒத்துழைப்பு தராத சில அதிகாரிகளை மாற்றுவதுமே தற்போதைய முக்கிய வேலையாக கொண்டு இருப்பவர் அவர்.
ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வுக்கு காரணமான தினேஷ் திரிவேதியை நீக்கி, முகுல் ராயை நியமித்தார். பின்னர், கருணாநிதி போல மத்திய அரசை மிரட்டி தன் வேலையை முடித்து கொண்டும் காலத்தை ஒட்டிகொண்டிருகிறார். இதை சித்தரிக்கும் பல கார்ட்டூன்களும், கட்டுரைகளும் இன்னும் இணையதளங்களில் இருகின்றன. இதை பகிர்வது அவரவர் உரிமை சார்ந்தது, அதற்காக அனைவரையும் கைது செய்தால் பல படித்த நபர்கள் சிறையில் தான் இருக்கவேண்டும்.
மம்தாவுக்கும் நமது முதல்வரை போன்று “தான்” என்ற எண்ணம் வந்துவிட்டது. இவரை போலவே அவரும் சில தேவையில்லா மாற்றங்களை செய்து வருகிறார். பள்ளி மாணவர்கள் பாட புத்தகத்தில் கம்யூனிஸம் தொடர்பான வரலாற்று பாடத்தை நீக்க உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நீக்கியுள்ளார். இது கார்ல் மார்க்ஸ் அவர்களை அவமதிபதர்க்கு சமமாகும்.
சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் கபில் சிபில் இணையதளங்களில் இந்தியாவை சித்தரிக்கும் செய்திகளை நீக்கிவிடுமாறு கூகிள், யாஹூ, பேஸ்புக் போன்ற நிறுவன இந்திய அதிகாரிகளிடம் ஒரு பட்டியலை அளித்தார். கூகிள் அந்த பட்டியலை வெளியிட்டது. அதில், நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட எந்த ஒரு செய்தியும் இந்தியாவை சார்ந்தது அல்ல, எல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மன்மோகன் சிங்க் போன்றோர்களை சித்தரித்த செய்திகள் என்பது குறிப்பிடபட்டது.
இப்படி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு நமது நாட்டின் அரசியல்வாதிகள் பெரும் ஆட்டம்போட்டு கொண்டிருக்கின்றனர். நம்மிடம் இருக்கும் அதிகபட்ச பேசும் உரிமையை கூட இவர்கள் பறிக்கின்றனர். ஒரு வேலை, ஜனவரியில் தில்லியை நோக்கி இரண்டு பட்டால்லியன்கள்  பாராளமன்ரத்தை நெருங்கி இருந்தால் ஒரு வேலை, வளைகுடா பகுதிகளில் தற்போது, நடந்துகொண்டிருக்கும் ஒரு புரட்சி உறுவாகி இருக்கும். அப்போதாவது, நமக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆனால், அதிலும் அரசியல் விளையாடிவிட்டது....

Sunday, April 08, 2012

140


அப்படி, என்னதான் அதில் இருக்கு. இன்றைய உலகில் சமூக வலைத்தளத்தில் இந்த 140 காலூன்றி நின்றுவிட்டது. ட்விட்டரின் செய்தி பகிர்வதற்கான எழுத்துக்களின் எண்ணிக்கையே இந்த 140. 140 எழுத்துக்களுக்குள் ஒருவர் தாம் சொல்லவந்த செய்தியை, கருத்துக்களை சொல்லி முடிக்க முடியும் என்று நிருபித்துகாட்டிவிட்டது இந்த ட்விட்டர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் சர்வமும் இன்டர்நெட் மயமான பிறகு மனிதனின் வேலை சுமை குறைவதால், அவன் சோம்பேறி ஆகின்றான். உட்கார்ந்த இடத்தில் எதையும் செய்யலாம் என்று ஆனபிறகு, அரசியல்வாதி போல் மேடையேறி எதிர்ப்பு தெரிவிக்க அவசியமில்லை. 140 எழுத்துக்களுக்குள் தான் சொல்ல வந்ததை சுலபமாக சொல்லிவிட முடியும். இதற்க்கு சில நேரங்களில் பதில்களும் மற்றும் ரீட்வீட்டுகளும் கிடைக்கும்.
ட்விட்டர் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆதலால் என்னையும் அதில் இணைத்து கொண்டேன். தற்போது, ட்விட்டரில் இணைந்து ஆறுமாத காலமாகிறது. இந்த ஆறு மாதமும் ட்விட்டரால் அடிமைபடுத்தப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், நமக்கு பிடித்தவர்களை நாம் பின்தொடர்வதால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நான் ஆர்வம்  கொள்கிறோம். நாம் பின்தொடற்பவர்கள் நெல்சன் மண்டேலாவும் அல்ல அப்துல் கலாமும் அல்ல, எல்லாம் சினிமா நடிகர் நடிகைகள் தான்.
பிக் பி முதலில் தான் தாத்தா ஆக போகிற செய்தியை ட்வீட் செய்த சில நொடிகளிலே நான் தெரிந்து கொண்டேன். இது மட்டுமல்லாது பலர் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று ட்வீட் செய்ய செய்ய நான் அதை படித்து கொண்டிருந்தேன் (வேற வேலை இல்லை, அதான் இப்படி). இப்படி நாளுக்கு நாள் நேரத்தை வீனடிகிறேன் என்று எண்ணி எனது அக்கௌன்ட்டை மூடி விட முடிவு செய்த போது ட்விட்டரில் சில ஜோக்ஸ் படித்தேன், மற்றும் சில நாட்டு நடப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டேன்.அந்த நேரத்தில் ட்விட்டர் நபர்களால் கலாய்க்கபட்டவர் நம்ம கபில் சிபில் அய்யா தான். நானும் அவர் செய்த நல்ல காரியங்களுக்காக ஒரு வாங்கு வாங்கிவிட்டேன்.
இப்படி சிலரை சகையாடுவதர்க்கு மட்டுமலாது, சில முக்கிய செய்திகளையும், தொழில்நுட்ப கருத்துகளையும் தெரிந்துகொள்ள ட்விட்டர் மிகவும் பயனாக உள்ளது. பேஸ் புக் இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. வரும்காலத்தில் ட்விட்டரும் இந்தியர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எண்ணுகிறேன்.


 

வந்து போனவுங்க