Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Saturday, July 28, 2012

சோனியாவுடன் நேர்காணல்!!!



நிருபர்:           வணக்கம் மேடம்.

சோனியா ஜி:   குட் மார்னிங்னு சொல்லுங்க. இல்லையா போண்ஜோவ் னு சொல்லுங்க. வணக்கம்னு மட்டும் சொல்லாதீங்க? எனக்கு தமிழ கண்டாலே பிடிக்காது.

நிருபர்:         குட் மார்னிங் மேடம். உங்க கட்சியை சார்ந்த பிரணாப் முகர்ஜி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு என் வாழ்த்துக்கள் மேடம்.

சோனியா ஜி:   ரொம்ப தேங்க்ஸ். அவர் ஜெய்ச்சதுக்கு நான் தான் ஒட்டு போட்டவுங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

நிருபர்:         ஏன் மேடம். இந்த தேர்தல் முடிஞ்சதுல இருந்து நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்களே எதாவுது உள்குத்து இருக்கா ஜி?

சோனியா ஜி:   இந்த சோனியா எத செஞ்சாலும் அதுல ஒரு உள்குத்து இருக்கும். கட்சில இருந்த பெருசுங்க பட்டியல்ல மொதல்ல இருந்தே இந்த பிரணாப் என் பேச்சை கேட்கவே மாட்டான். இப்ப அவன் டம்மி பீஸ் ஆகிடான்ல! அதான் சந்தோசம்.

நிருபர்:         மேடம், இப்ப அவர் குடியரசு தலைவர். அவர அவன் இவன்னு சொல்லாதீங்க.

சோனியா ஜி:   உங்களுக்கு தான் அவன் அதிபர். எனக்கு இல்ல(நான் இத்தாலி )

நிருபர்:         இந்த தேர்தல்ல உங்க கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதுனால இந்த நாட்டுக்கு எதாவுது நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டா?

சோனியா ஜி:   நாட்டுக்கு இருக்கானு தெரியாது. பட், என் வீட்டுக்கு இருக்கு!

நிருபர்:           புரியலையே?

சோனியா ஜி:   ராகுல்ல அடுத்த பிரதமரா ஆக்கலாம்னு இருந்தேன். எங்க அதுக்கு எடஞ்சலா பிரணாப் இருப்பாரோனு அவர டம்மி பீஸ் ஆக்கிடேன். சோ, இனி மை சன் இஸ் நெக்ஸ்ட் பி.அம்.

நிருபர்:           அடங்கோ! இவ இவ்வளவு பெரிய தில்லாலங்கடினு தெரியாம போச்சே. மேடம், உங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

சோனியா ஜி:   பிரணாப் பிரச்சனையை முடிஞ்சுது. இனி அடுத்து அண்ணா ஹசாரே தான். ஹி இஸ் மை நெக்ஸ்ட் டார்கெட்.

நிருபர்:           மேடம், எதுனலா இந்த தேர்தல்ல நீங்க ஜெயச்ச உடனேயே மம்தாவும், சரத் பவாரும் பிரச்சன பண்றாங்களே இது பத்தி நீங்க என்ன சொல்றீங்க?

சோனியா ஜி:   இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. மம்தாக்கு ஜெ மாறியே ஆனவம் வந்திருச்சு. இந்த பவார் இவருக்கு மந்திரி சபைல இரண்டாம் இடம் வேண்டுமாம். இவனெல்லாம் மதிச்சு கூட்டணில வச்சிகுடதே பெருசு. இரண்டாம் இடத்த இவனுக்கு குடுத்துட்டு நான் எங்க போறது. சிதம்பரம் வேற அமைதியாவே இருக்காரு. எப்ப பிரச்சன வரும்னு தெரியல.

நிருபர்:           மேடம், எப்படி முலாயம் சிங்கையும், மாயாவதியையும் சம்மதிக்க வச்சீங்க?

சோனியா ஜி:   ஓ, அதுவா. எல்லாம் பக்கா பாலிடிக்ஸ் தான். என்ன பண்ணி என்ன பிரயோஜனம்.

நிருபர்:           ஒய் மேடம்?

சோனியா ஜி:   முலாயம் சிங்கோட ஒட்டு செல்லாத ஒட்டு. இவனுக்கு ஓட்டே போட தெரியல இவனை எல்லாம் வச்சிகுட்டு என்ன தான் பண்றதோ. ஐ மீன் கூட்டணில.

நிருபர்:           நீங்க ஏன் ஜி அப்துல் கலாம ஆதரிக்கல?

சோனியா ஜி:   அட, அவருக்கு ஒண்ணுமே தெரியலீங்க.இவற மாதிரி ஆளுங்க அதிபரா வந்தா நம்ம நாடு முன்னேறாது.

நிருபர்:           ஜி, அவரு பெரிய விஞ்ஞானி. அவருக்கு போய் நாட்ட வழி நடத்த தெரியாதுனா எப்படி?

சோனியா ஜி:   விஞ்ஞானியா இருந்தா மட்டும் போதுமா. ஊழல் பன்ன தெரியணும், நான் சொல்ற எல்லாத்துக்கும் சரி சரின்னு தலைய ஆட்ட தெரியணும். அட இதெலாம் விட என்னை காட்பாதர்ரா ஏத்துக்கணும். என்னோட அடுத்த பிளான் 3G. இவரு இருந்தா நடக்குமா????சோ, பிரணாப் இஸ் மை சாய்ஸ்.

நிருபர்:           சரிதான். இப்டி இருக்குறதுக்கு அவர் விஞ்ஞானியாவே இருக்கட்டும். மேடம், அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கை நம்ம பிரதமர செயல் திறன் அற்றவர்னு சொன்னாங்களே அத பத்தி நீங்க என்ன சொல்றீங்க?

சோனியா ஜி:    என்னங்க ஒரு பத்திரிக்கை நிருபர் நீங்க உங்களுக்கே தெரியாதா. அதான், அவுட்லுக் பத்திரிக்கைல ஒபாமா செயல்திறன் அற்றவருன்னு சொல்லி பதிலுக்கு அறிக்கை விட்டோமே தெரியலையா?

நிருபர்:           ஜி, இருந்தாலும் உங்க கட்சிக்காரங்க பன்னினது ரொம்ப ஓவர். அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டதுக்கு இங்க இருக்குற டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைய உங்க ஆளுங்க எரிச்சு போராட்டம் பண்ணுனாங்க. ரெண்டும் வேற வேற நிருவனம்னு அவுங்களுக்கு தெரியாதா.

சோனியா ஜி:    நீங்க வேற, நான் டைமெக்ஸ் வாட்ச் கம்பெனி முன்னாடியும் போராட்டம் பன்ன சொன்னேன். ஆனா, எவனும் பண்ணல. ஐ பீல் வெரி அப்செட்.

நிருபர்:           வெலங்குச்சு போ. இதுக்கு தொண்டர்களே பரவாயில்லை.
நிருபர்:         மேடம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்விஜய் சிங் தன்னோட பதவிய ஏன் ராஜினாமா பண்ணிட்டார்.
சோனியா ஜி:    ஓ, அதுவா என் மருமகனுக்கும் அவருக்கும் ஒத்து போகல. சோ, இ சேட் டு ரிசைன்..
நிருபர்:         மேடம், காமன் வெல்த் கேம்ஸ் ஊழல்ல உங்க மருமகனுக்கும் தொடர்பு இருக்குதாமே. நீங்க தான் அவர காப்பாத்துனதா சொல்றாங்க.

சோனியா ஜி:    ஹு சேட் திஸ்? என் மருமகனுக்கு நான் ஒன்னும் சப்போர்ட் பன்னல. ஹி இஸ் வெரி டேலேன்ட். அவரே தான் மறைச்சிட்டாரு.

நிருபர்:         அப்ப, ஊழல் நடந்தத ஒத்துக்குறீங்க?

சோனியா ஜி:    அட, யாருங்க நீங்க. காங்கிரஸ் = ஊழல். இது தான் எங்களோட தாரக மந்திரம்.

நிருபர்:         உங்களோட எதிர்கால திட்டம் என்ன ஜி?

சோனியா ஜி:    நான் அதிபரா ஆகணும். ராகுல் பிரதமரா ஆகணும், என் மகள் தில்லிக்கு முதல்வரா ஆகணும். என் மருமகன் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரா ஆகணும். பேரப்புள்ளைங்க ஆளுக்கு ஒரு மாநிலமா எடுத்து அதிகாரம் பண்ணனும். இவ்வளவு தான்.

நிருபர்:         என்ன, இவ்வளவு தானா? மேடம், ஒரு வேலை இந்தியாவினல் எதாவுது புரட்சி நடந்துவிட்டால் என்ன செய்வீங்கோ?

சோனியா ஜி:    உடனே, இத்தாலிக்கு எஸ்கேப்!!!!!

Wednesday, July 25, 2012

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய முதற்தாய் மொழிவாயிலாகவும் நாம் நன்கறிகிறோம்.

Monday, July 23, 2012

மனம் - மூளையின் விளையாட்டு பொருள்!



நீண்ட நாட்களாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகம். மனம் என்று நம் மனித உடம்பில் எந்த ஒரு உறுப்பும் கிடையாது. அப்படி யிருக்கையில் நாம் ஏன் அடிக்கடி மனசு சரியில்லை என்று சொல்கிறோம். மனம் என்று சொன்ன உடனேயே நம் கை ஏன் இதயத்திற்கு தானாக செல்கிறது. இது போன்று சில கேள்விகளுக்கு எனக்கு ஓரளவுக்கு விடை கிடைத்துவிட்டது. இதை தங்களுடன் எனது உரைநடையில் பகிர்கிறேன்.

Friday, July 20, 2012

டார்க் நைட் ரைசஸ் - The Epic Concluded



கிறிஸ்டோபர் நோலன் கைவண்ணத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்த இத்திரைப்படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இதன் முந்தய இரண்டு பாகமும், இயக்குனர் மீது இருக்கும் நம்பிக்கையும் தான். உலகில் அதிக பிரிண்ட் போடப்பட்ட 2வது  படம் என்ற பெயரை வாங்கயுள்ளது 4404 திரைஅரங்கு.Twillight Saga-Eclipse 4468 பிரிண்ட் போட்டு முதல் இடத்தில் உள்ளது. அவேஞ்சர்ஸ் எல்லாம் அடுத்து தான்.
ப்ருஸ் வேயின், அல்பிரெட், பாக்ஸ் இவர்கள் தான் எப்போதும் போல இதிலும் தங்கள் வேலையை சரியாக செய்து வருகின்றனர். வில்லனாக ஒரு வித மாஸ்க் அணிந்து கொண்டு வரும் வில்லனின் பெயரும் வேயின் தான். கதை ஆரம்பம் ஆனது முதல் எதற்காக இந்த வில்லன் இவன் ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறான் என்றே சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதை ஆரம்பம் ஆன உடனேயே போலீஸ் கமிஸ்னர் வில்லனிடம் உதை வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார். ஹீரோ காலில் அடிப்பட்டு ஒரு பெண்ணிடம் பல முறை பல்பு வாங்குகிறார். ப்ருஸ் வேயினின் நிறுவனத்தை அவர் கைரேகைகை பயன்படுத்தி  வில்லன்கள் அவரது சொத்துக்களை ஷேர் மார்க்கெட்டில் புகுத்தி அவரை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
முந்தய பாகங்களில் போலீஸ் கமிஸ்னர் செய்து வந்த வேலையை இதில் வேறுஒரு இளம் போலீஸ் அதிகாரியை செய்யவைத்துள்ளனர். கேட்வோமன் போன்ற ஒரு கேரேக்ட்டரை இதில் புகுதிஉள்ளார் இயக்குனர். வெறும் தோற்றம் மற்றுமே ஸ்பெஸல் பவர் கிடையாது. நாயகன் வைத்திருக்கும் நியூகிளியர் எநேர்ஜி ரியாக்ட்டர் மூலம் கோதம் நகரத்தையே அழிக்க வில்லன் ஒரு பிஸ்ஸன் மூலம் ஒரு குண்டை உருவாக்கி அதை வைத்து நகரத்தையே பயமுறுத்துகிறான்.
ஹீரோ வில்லனிடம் அடிவாங்கி, மிதிவாங்கி, உதைவாங்கி பல மாதங்களாக வில்லனின் சிறைசாலையில் உள்ளார். அந்த சிறைசாலையில் இருந்து வெளியே வர ஒரு கிணற்றின் மூலமாக தான் ஏறி வர வேண்டும். கதை உடனேயே பிளாஷ் பேக்கிற்கு செல்கிறது. இதுவரை ஒரே ஒரு குழந்தை மட்டுமே அந்த கிணற்றை ஏறி வெளியே வந்தது அது தான் வில்லன் என்று நம்மை இயக்குனர் நம்பவைத்துவிட்டு இறுதியில் அது ஒரு பெண் பெயர் மிரண்டா என்று நம்மை முட்டாள் ஆக்கி விடுகிறார். நாயகன் அந்த கிணற்றின் அடியில் இருந்து வெளியே வந்து எப்படி வில்லனை கொள்கிறார் என்பது மிச்ச கதை. வில்லன் ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறார் என்று இறுதியில் ஒரே ஸாட்டில் சொல்லிவிடுகிறார்.
அந்த குழந்தை அதாவது மிரண்டாவை அந்த சிறையில் இருந்து காப்பாற்றிய நபர் தான் அந்த முகமுடி அணிந்த வில்லன். மிரான்டா யார் என்று சொல்ல கதைக்குள் சிறு சிறு கதையை சொல்கிறார் இயக்குனர். இறுதியில் அந்த வெடிகுண்டை அழித்துவிட்டு தானும் இறந்துவிடுகிறார். பின்னர் அவரது சொத்துக்கள் யாவும் அநாதை இல்லத்திற்கு ஒப்படைக்க படுகின்றது. அந்த இளம் போலீஸ் அதிகாரியாக வரும் நபரிடம் தன் பேஸ்மென்ட் இடத்தை பற்றி தெரிவித்து அவரது ஆயுதங்கள் வைத்திருக்கும் இடத்தை அவரிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் அல்பிரெட் டிடம் சேர்கிறார்.

நச்சுனு நாலு:
1.      இவர் கயிறை திரியாக்கி மறுபடியும் திரியை கயிறாக்கி அதில் வெளிச்சம் எடுப்பவர்.
2.      வீரம் என்பது உடலை பலப்டுத்துவது மட்டும் அல்ல, மனதை பலமாக வைத்துகொள்வதும் தான்.
3.      உனக்கு எது பயத்த தருதோ நீ, அதுவாகவே மாறனும்.
4.      நான் இங்கே உங்களை ஆட்டிபடைக்க வரவில்லை, நீங்கள் யார் என்று உங்களுக்கு புரியவைக்கதான் வந்தேன்.
கொசுறு:
முந்தய பாகத்தில் இருந்த சுறுசுறுப்பு பேட்மேனிடம் இல்லை. சற்றே தொங்கல் போல் கானபடுகிறார். ஹான்ஸ் ஜிம்மர்ரின் இசை ஒரு பலம் என்றாலும் அதிகமாக பயன்படுத்தவில்லை. இந்தியாவில் சோனி மியூசிக் நிறுவனம் இத்திரைப்படத்தின் பிஜிஏம் உரிமையை வாங்கி லாபம் பார்த்துவிட்டது. இதுவே முடிவு, அடுத்த பாகம் கிடையாது.

Monday, July 16, 2012

சன் ஆப் தி மாஸ்க் -திரை விமர்சனம்



ஜிம் கேரி நடித்த மாஸ்க் படத்தின் தொடர்ச்சி என்று யாரும் நினைக்க வேண்டாம். அது செம ஹிட் ஆனா படம். இது செம பிளாப் ஆனா படம். 2005இல் வெளியானது.
லாரன்ஸ் கட்டர்மேன் இயக்கத்தில் ஜாமி கேனேடி நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ஆரம்பம் ஆனதும் தெரியாது முடிவதும் தெரியாது. ஒரு நாய், நாயகன், குழந்தை, வில்லன் மற்றும் குழந்தையின் அம்மா எவர்கள் மற்றுமே இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள்.
படம் ஆரம்பமான உடனே நமக்கு தோர் திரைப்படத்தின் கதையை ஒருவர் கூறுவார்(தோர் பார்க்காதவர்களுக்கு). இதில் வரும் தோர் மற்றும் லோகி போன்றவர்களின் சிறப்பினை கூறிவிட்டு வழக்கம் போல லோகி ஒரு கொடும்கோல் வில்லன் என்றே அவரை அறிமுகம் செய்கிறார் ஒரு மியூஸியம் அதிகாரி. அங்கிருந்து புறப்படும் வில்லன் தான் தேவலோகத்தில் தொலைத்த மாஸ்க்கை தேடி பூலோகம் வந்திருப்பது தான் கதை(கௌண்டமணி போல).
நாயகன் குழந்தை பெற விருப்பன் இல்லாமல் இருப்பார். ஆனால், அவரது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவார். நாயகனின் பெயர் டிம். இவர் ஒரு பொம்மை விளையாட்டு காட்டும் இடத்தில் பணி புரிகிறார். ஒரு நாள் அவரது நாய்(ஓடிஸ்) அந்த மாஸ்க்கை எடுத்து வந்து அவரிடம் தருகிறது அதை அவர் போட்டு கொண்டு சுற்றுகிறார். அதில் அவர் செய்யும் லூட்டிகள் தான் மிச்ச காட்சி. அதே களைப்புடன் வீட்டுக்கு சென்று குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். குழந்தையும் பிறக்கிறது (அபார சக்தியுடன்)
லோகியின் தந்தை லோகிக்கு காலக்கெடு நிர்ணயித்து சென்று விடுகிறார். ஆதலால், ஒவ்வொரு வீடாக சென்று அந்த மாஸ்க் மற்றும் குழந்தையை தேடுகிறார். இதன் நடுவில் டிம்மிடம் குழந்தையை விட்டு நாயகி வேலை காரணமாக வெளியூர் செல்கிறார். இனி குழந்தை அடிக்கும் லூட்டியை தாங்க முடியாமல் டிம் திணறுகிறார்.
குழந்தை(அல்பி) பிறந்தவுடன் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று என்னி குழந்தையை நாய் ஓடிஸ் கொன்று விட நினைத்து கடைசியில் பல்பு வாங்கிகொல்கிறது.
லோகி கடைசியில் குழந்தையை கண்டுபிடித்து விடுகிறான். அந்த மாஸ்க்கை கொண்டு வந்து கொடுத்துவிட்டு குழந்தையை பெற்றுகொள்ளுமாறு சொல்லிவிட்டு குழந்தையுடன் சென்று விடுகிறார். பிறகு ஓடிஸ்ஸி டம் அந்த மாஸ்க்கை தரும் படி காலில் விழாத குறையாய் கேட்டுவிட்டு எப்படி வில்லனை சமாளிக்குறார் என்பதே கதை...
நச்சுன்னு நாலு:
1.       ஹனி நீங்க வீட்ல இருங்க, நான் பக்கத்துக்கு வீட்டுக்கு போய் அவரிடம் குழந்தைக்கு ஏற்ப்பாடு செய்துக்குறேன்.
2.       என்னை எனக்காக விரும்புங்கள், நான் எப்படி இருக்க கூடாது என்பதற்காக என்னை வெருக்காதீர்கள்.
3.       நான் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே என்னை நீங்கள் அனுப்புகுறீர்கள்.
4.       அவன நீ கொன்னாலும் அவன் உன் மகன். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
கொசுறு:
இது குழந்தைகளுக்கான படம். ஒன்றரை மணிநேரத்தில் முடிந்து விடும். போர் அடிச்சால் பார்க்கலாம். ஜிம் கேரியின் நடிப்பை  இவர்களிடம் எதிர்பாக்காதீர்கள்.

Sunday, July 15, 2012

அறிவியலின் அடுத்த படி.



இந்த கடவுளின் துகளை கண்டறியும் முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போதுதான் அந்த சோதனை மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனாலும் முழுமையான சோதனை முடிய இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம். இதையடுத்து வேறோரு கோணத்தில் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டே போகும் என்பது நிச்சயம்.

         இந்த சோதனை நடந்தால் உலகமே அழியும் என ஒரு குரூப் தீவிரமாக இந்த சோதனைக்கு எதிராக நின்றனர். அளவிட முடியாத அணுவின் ஆற்றல் இந்த மோதலில் விளைவாய் ஏற்படும் இதன் மூலம் உலகம் அழியும் என சிலரும், உலகம் இந்த சோதனையினால் சுருங்கி சிதறும் என ஒரு செட்டப் குரூப்பும் தங்கள் தரப்பு விளக்கங்களோடு எதிர்க்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் பூமியிலுள்ள உயிர்வழி எல்லாம் இந்த சோதனையின் மூலம் இழுக்கப்பட்டு பூமி வெற்றிடமாகிவிடும். இந்த பூமி எனும் கோளமே இந்தச் சோதனையின் மூலம் முழுமையாக அழிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

          டாக்டர். அட்ரியன் கெண்ட் என்பவர் இந்த சோதனையின் விளைவுகள் கவனமாய் பரிசீலிக்கப்படவில்லை எனவும் ஒட்டு மொத்த மனித குலத்தில் சாவுமணியாய் இருக்கக் கூடும் இந்த அராய்ச்சி என 2003 ல் ஒரு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.

           எனினும், இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளவர்களோ, இதில் உலகிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தொடர்ந்து சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பார்த்தால் வியப்பில் புருவங்கள் எகிறிம்.

          பிரான்சு சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில்தான் இந்த சோதனைத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில் பூமிக்குக் கீழே சுமார் நூறு மீட்டர் ஆழத்தில் தான் இந்த சோதனைச் சாலையே அமைகிறது.

         உள்ளே மிக சக்தி வாய்ந்த ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். இந்தச் சுற்றுப் பாதையின் நீளம் 27 கிலோ மீட்டர்கள்! இந்தச் சுற்றுப் பாதை மிக மிக சக்தி வாய்ந்த, கனம் வாய்ந்த, வலிமை வாய்ந்த உலோகங்களால் அமைக்கப்படுகிறது. அணுக்களின் மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே துல்லியமாய் ஊகிப்பது கடினம் என்பதால் அதீத கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

            இந்த 27 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சுமார் 5000 காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவையே இந்த ஒளிக்கற்றையை சரியான பாதையில் பயணிக்கவைக்கும். இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சுமார் -271 டிகிரி செண்டிகிரேடில் உறை குளிர் நிலையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக குளிரான இடம் இது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு இன்னோரு அறிவியல் தகவல். இந்த அமைப்பை இந்த நிலைக்குக் குளிர வைக்கவே சுமார் ஒரு மாத காலம் ஆகுமாம்.

            இந்த அமைப்பிலுள்ள காம்பாக்ட் மோன் சோலினாய்ட் ( Compact Muon Solenoid (CMS) ), எனும் ஒரு சிறு பகுதியின் எடை மட்டுமே சுமார் 2500 டன் என்றால் மொத்த அமைப்பின் எடையை சற்று யோசித்துப் பாருங்கள். இதை பூமியில் நூறு அடி ஆழத்தில் இறக்கி வைக்க ஆன நேரமே 12 மணி நேரம் எனில் மொத்த அமைப்பின் தயாரிப்புக் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.சரி, இதை வைத்துக் கொண்டு எப்படித் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

           எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், இந்த வட்டப்பாதையில் ஒரு முனையிலிருந்து இரண்டு புரோட்டான் ஒளிக்கதிர்களை பாய்ச்சுவார்கள். இதன் சக்தி 450 கிகா எலக்டோ வால்ட். இது சுற்றுப் பாதையில் இரண்டு பக்கமுமாகப் பாய்ந்து செல்லும். இந்த பாய்ச்சலை சுற்றியிருக்கும் காந்தங்கள் வகைப்படுத்தும்.

             வட்டத்தில் இரண்டு பாதை வழியாக வேகமாக வரும் இந்த கதிர்கள் ஒரு இடத்தில் மோதிச் சிதறும். அந்த மோதிச் சிதறும் கணத்தில் இந்த கடவுளின் துகள் என்று அவர்கள் அழைக்கும் சக்தி வெளிப்படும் என்பதே அவர்களுடைய கணிப்பு. எவ்வளவு சக்தி வந்தாலும் இந்த அமைப்பு தாங்குமா என்பதை பல்வேறு கடினமாக சோதனைகள் மூலம் சோதித்து வந்தன்ர்.

               பன்னிரண்டாயிரம் ஆம்ப்ஸ் மின்சாரத்தை இவற்றில் பாய்ச்சி சோதிப்பது அவற்றில் ஒன்று. பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிகழவிருக்கும் இந்த ஆய்வு விஞ்ஞானத்தில் இன்னும் பல மர்மக் கதவுகளை திறக்கப் படவில்லை.

               இந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும் பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம், அல்லது இயற்கை கட்டமைப்பின் மாற்றங்களை உருவாக்கலாம், பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய் மாறிவிடலாம் எனும் அச்சம் வேறு பல ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.
இந்தச் சோதனை குறித்த விரிவான தகவல்கள் பெற விரும்பினால் http://lhc.web.cern.ch/lhc/ எனும் இணைய தளத்தை நாடலாம்.

நன்றி:

 

வந்து போனவுங்க