Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, January 30, 2012

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.



 - நண்பனின்இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது...
http://justurs.wordpress.com/2011/08/15/

Tuesday, January 24, 2012

நீ, நான்.




ஆண் :     ஒரு மின்னல் போல் நீ 
 வந்து ஆடுறாய், 
 அந்த ஜன்னல் வழியேதான் 
 என்னை தேடுறாய்.

            சொர்கத்தின் வாசல்கள் 
 நீதானடி,  
 உன் பிம்பத்தில் குளிர்காய 
 வந்தேனடி.  

பெண் :     என் வாழ்க்கை
            துணையாக நீயே இரு, 
            உன் வாழ்வின் 
            மிச்சத்தை எனக்கே கொடு. 

ஆண் :     நீ வேறு, நான் வேறு
            இல்லையடி.  
            இனி, நான் தானே 
            பந்தத்தின் சொந்தமடி. 

பெண் :     காற்றோடு காற்றாக
            என்னை இழு, 
            கடல்தாண்டி வரும் 
            அலையை தடு. 

ஆண் :     பூவில் ஒளிந்திருக்கும் 
 வண்டு நீதான்,
 இந்த பூமி பந்தின்
 மகளும் நீதான்.

 பார்த்தாலே படபடக்கும்
 பெண்ணும் நீதான்,
 தொட்டாலே ஷாக் அடிக்கும்
 கரண்ட்டும் நீதான்.

பெண் :     தினந்தோறும் நான் படிக்கும் 
 நாளிதழ் நீதான்,
 நாடெங்கும் போற்றிடும்
 ஆளும் நீதான்.

 கிட்ட நீ வந்தாலே
 நடு நடுங்குது,
 உள் நெஞ்சு தானாக
 பட படபடக்குது.

Wednesday, January 18, 2012

தவிக்கிறேன்


இதயமே,
என் அருகில் வா
ஒருமுறை
என்னை பார்
தவிக்கிறேன்
உனக்காக தான்.
விடியலை
நான் வெறுக்கிறேன்
கனவிலும்
உன்னை நினைக்கிறன்
மனதிலே
இந்த மாற்றம் ஏனோ
ஒருமுறை
உன்னை பார்த்தது தானோ!!!

Wednesday, January 11, 2012

அருகில் வா


என் அருகே வாராயோ
உன் வழியில் நான் விளையாட
விளையும் பயிர்கள் ஆயிரம்
நீ விளைக்கும் பயன்களும் ஆயிரம்
நதியின் மீது நீ நடனமாட
உன் இடையின் மீது நான் வதனமாட
நெஞ்சம் இங்கு ஊமையாகுதே
அதில் நஞ்சும் வந்து கலந்து சேறுதே
உன் விழிகள் பேசும் மொழிகள் யாவும் விண்மீன்கள் போல
கடலில் கலக்கும் நதிகள் யாவும் உன்னை[ப் போல
நிலவில் எழும் ஒளியை போல உன் பார்வை
அதில் மயங்கும் உன் மன்னவன் நான்.

Saturday, January 07, 2012

பேரழகி

மங்கை அவள் வந்தாளே
மாந்தோப்பு காட்டிற்கு
மன்னவனும் வந்தானே
மானை தேடி

கண்டானே அவளை
பயிங்கிளி நிறத்தவளை
விழுந்தானே அவ்விடமே
அவளின் அழகைக்கண்டு

மானையும் கண்டானே
மங்கையையும் கண்டானே
குழம்பித்தான் போனானே
இருவரில் யார் அழகென்று

விழி என்னும் வில்லில்
பார்வை அம்பினை தொடுத்து
வேட்டையாட வந்தவனை
வேட்டையாடி சென்றாளே!!!

Thursday, January 05, 2012

காட்பாதர் (விமர்சனம் அல்ல ஓர் தாக்கம் )


காட்பாதர்இந்த பெயருக்கு உலகத்திலுள்ள கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி என்னதான் இதுல இருக்கு. இந்த படத்த பார்க்கும்போது பலருக்கு பல நினைவுகளும் சிலருக்கு தம்முடைய எதிர்காலம் பற்றிய யோசனையும் வரும். ஆனால், எனக்கு இந்த படத்தின் மூன்று பாகங்களையும் பார்த்த பிறகு நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது வெட்கபடுகிறேன். இதன் தாக்கம் சில நாட்களுக்கு இருந்தது, பிறகு அதை மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
பழிவாங்குதல், ஆங்கிலத்தில் இதை revenge or vengeance என்று சொல்வார்கள். இந்த வென்ஜென்ஸ் என்ற வார்த்தை ஏறக்குறைய எல்லோர் வாழ்க்கையிலும் வந்து சென்றிருக்கும். காரணம் நாம் சாதாரன மனிதர்கள். இப்போது நாம்(ன்) பக்குவமடைந்துவிட்டோம்(ன்) என்றாலும் கூட சிறுவயதில் ஒருவர்மீது பொறாமையும், அவரை எப்படியாது வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் கண்டிப்பாக வந்ததுண்டு. பள்ளி பருவத்தில் நம்மை விட ஒருவன் நன்றாக படிக்கிறான் என்றால் அவனை எப்படியாது  வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணம். நான் கேட்ட போது எனக்கு அந்த நோட்டு புத்தகத்தை தராமல், மற்றொருவனுக்கு எப்படி தரலாம். இந்த எண்ணமும் ஒரு வகையில் வென்ஜென்ஸ்  தான். எனக்கு பிடித்த என் வகுப்பு தோழியிடம் நீ எப்படி பேசலாம் என்ற அவனிடம் சண்டையிடுவது , தன்னை ஒருவன் திட்டிவிட்டான் என்று அவனை நாமும் திட்டுவது  என்று இது போன்று பல தருணங்களில் நாம் பழிவாங்குகிறோம். இவைகளாவது நாம் அறியாத வயதில் செய்தவை. ஆனால், இன்றும் கூட நாம் ஒருவரை ஒருவர் பழிவாங்கிகொண்டுதான் இருக்கிறோம். காரணம் சுயநலம், தான் எப்படியாவது வாழ்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம்.
இந்த படத்தில் அல்பசினோ(Al pacino) தன் சகோதரரின் மகனிடம் நீ டானாக (Don) உயரவேண்டும் என்றால் நீ விரும்பும் அனைத்தையும் இழக்க வேண்டும் என்று கூறுவார். இது நூறு சதவீதம் உண்மை என்று எனக்கு தோன்றுகிறது, வாழ்க்கையில் நாம் பலவற்றை இலந்துகொண்டுயிருகிறோம். இதற்கு சில காரணங்களும் உண்டு, ஒன்று ஏழ்மை அல்லது இயலாமை. இது நம்மை மட்டும் சார்ந்தது அல்ல நம் குடும்பத்தாரையும் , சுற்றாரையும் சார்ந்துள்ளது. மற்றொன்று ஒன்றை அடைய வேண்டுமெனில் மற்றொன்றை இழக்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால், இறுதியில் நாம் எதை அடைகிறோம் “ஏமாற்றம்”.
பவர் (power), அதிகாரம்,தான்தான், தனக்கு கீழ்தான்  என்னும் கர்வங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை . ஒருவரை மேலே உயர்த்துவதும் அவரையே அதல பாதாளத்தில் தள்ளுவதும் அவரவர் செயல்களே. ஆனால் இதற்காக நாம் என்ன செய்கிறோம் ???(ஒன்றும் செய்யவில்லை , செய்யபோவதும் இல்லை). அனைத்து காட்பாதர்களிடம் உள்ள ஒரே ஒற்றுமை காதல். இதை மட்டும் தான் சரியாக செய்கிறோம். திருமணம் என்றால் என்ன என்று தெரியாத வயதிலே சில காதல்கள் வந்து சென்றுவிடுகின்றன. எப்போவாவது யாரையாவது காதலிப்பது கடைசியில் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது(நினைக்கும் போதே வாந்தி வருகிறது). துரோகம் (betrayal) இது நமக்கு அல்வா சாப்பிடுவது போல. சிறு வயது முதல் இதுவரை எவ்வளவோ செய்துவிட்டோம் என்னென்ன துரோகம் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள் (நான் உங்களுக்கு ஊறுகாய் அல்ல).இது போன்று சில தவறுகள் செய்ததை எண்ணி வருந்திவிட்டேன். இனி நீங்கள்......
 
 

வந்து போனவுங்க