Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Saturday, September 29, 2012

இன்றைய பள்ளி, கல்வி - ஒரு கேள்விக்குறி ??

கடந்த சில ஆண்டுகளில் நம் நாடு கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை கண்டிறிருக்கிறது. இதில் முக்கியமான முன்னேற்றம் என்று சொன்னால், தொடக்கப் பள்ளியில் சேர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது தான். 6-14 வயதுடைய சுமார் 200 மில்லியன் குழந்தைகளில் 80% குழந்தைகள் ஏதாவது ஒரு கல்வி முறையில் (விதிமுறையான-formal அல்லது முறைசாரா-non-formal education) சேர்ந்து படித்து வருகிறார்கள்.

அனால் ஒரு முழுமையான கல்வி தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று கல்வியின் தரம் வேண்டிய அளவு உயரவும் இல்லை, முழுமையாக கடைநிலை மக்களை போய் சேரவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தையும் நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாக அரசு மேற்கொள்ளும் பல் வேறு திட்டங்கள் பயனில்லாமல் போகிறது.

குழந்தைகளின் சேர்க்கை தொடக்க கல்வியில் அதிகரித்திருந்தாலும், இவர்களில் 52% பேருக்கு, 8 ஆம் வகுப்பிற்கு பின்னர் படிப்பை ஏதாவது ஒரு காரணத்தினால் தொடரமுடியாமல் போகிறது. மீதம் இருக்கும் 48% குழந்தைகளின் attendance rate சராசரியாக 75% தான். அரசின் கணக்கெடுப்புப்படி 5ஆம் வகுப்பு வரை தேறும் மாணவர்களில் 28% பேர் தான் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். மற்றவர்களின் கல்வி தரம் கவலை அளிக்ககூடியதாகவே இருக்கிறது. தொண்டு நிறுவணம் ஒன்று மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் மூலம் 7-14 வயதிற்கு உற்பட்ட மாணவர்களில் 35% பேருக்கு பாடத்தில் ஒரு சாதாரண பத்தியை கூட படிக்க முடிவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இத்தனை நிதி ஒதுக்கீடு செய்து, திடங்கள் வகுத்து, அதில் இத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று மார் தட்டி என்ன பயன்.

நம் கல்வியின் தரம் திருப்தியாய் இல்லாததற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வகுப்பில் அளவுக்கு அதிகமான மாணவர்களும் ஆசிரியர் பற்றாக்குறையும் முக்கியமான காரணங்கள்.நம் நாட்டின் சராசரி ஆசிரியர் மாணவன் விகிதம் 40:1 ஆக இருந்தாலும், பீஹார் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 84:1 ஆகவே இருக்கிறது. பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்தாலும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது சில பள்ளிகள்.14% தொடக்க பள்ளிகளும் 3% உயர் தொடக்க பள்ளிகளும் ஒரே ஒரு ஆசிரியிராலேயே நிர்வகித்து நடத்தப்பட்டு வருகிறது.சராசரியாக 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமே பல பள்ளிகள் இயங்கி வருகிறது.இதிலிருந்து அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை. உலக வங்கியும், ஹார்வர்ட் பல்கலைகழகமும் சேர்ந்து நடத்திய ஒரு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, 3700 ( அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி சென்று சோதனை செய்த போது, 20ல் இருந்து 25 சதவீத ஆசிரியர்கள்களே பள்ளியில் இருந்திருக்கிறார்கள். அப்படியே பள்ளிக்கு வந்தாலும், வந்தவர்களில் 20% பேர் பாடம் எடுப்பதில்லையாம்.இதை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

அடிப்படை வசதிகளான குடி தண்ணீர், கழிப்பறைகள் போன்றவை சில பள்ளிகளுக்கு இன்னும் ஒரு கணவாகவே இருந்து வருகிறது. 16% பள்ளிகளில் குடி தண்ணீர் வசதி கூட இல்லாமல் இயங்கி வருகிறது. 51% கழிப்பறைகள் இல்லாமல் இருக்கின்றன. மற்றொரு உண்மை 7% பள்ளிகள் கரும்பலகை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல.

இது போல வசதியின்மை காரணிகளாக இருந்தாலும் போதிய பயிற்சி பெறாத ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் அடிக்க கையில் குச்சியுடன் திரியும் ஆசிரியர்களை நாம் பார்கிறோம்.32% ஆசிரியர்கள் போதிய பயிற்சி இல்லாமலே ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். அடிப்படை பயிற்சி இல்லாத இவர்களிடம் தரமான கற்பித்தலை எவ்வாறு நாம் எதிர்பார்க்கமுடியும்?. உண்மையில் நல்ல திறமையும் ஆர்வமும் உள்ள பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரேமாதிரியான, விறுவிறுப்பில்லாத கற்பித்தல் மாணவர்களை படிப்பில் ஆர்வமில்லாமல் செய்துவிடுகிறது.செயற்திறனும் பயனும் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணலாம்
கல்வித்துறை நிர்வாகத்தில் நிலவும் பொறுபற்ற தன்மை,அலட்சியம் ஆகியவை மாறவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், தகுதியும் ஆர்வமும் மிக்க இளைஞர்களை கொண்டு திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் இந்தியாவின் கல்வித்தறம் உலக அளவில் முதன்மை பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Sunday, September 23, 2012

மாலை பொழுதின் மயக்கத்திலே




இந்த படத்துல நடிச்சவுங்க ஒன்னும் பெரிய ஆளுங்க கிடையாது. ஆனா, படம் பார்க்க பார்க்க பெருசா நமக்குல்ல எதையோ வெதச்சிடுறாங்க. நாயகனாக ஆரி, நாயகியாக சுபா ஆகியோர் நடித்துள்ளனர். மயூரி சேகர் தயாரித்துள்ளார். குறும் படம் இயக்குனர் நலன் மற்றும் மெரீனா படத்தில் சிவகார்த்திகேயன் நண்பராக வரும் நபரும் இதில் இருக்கிறார்.
படம் முழுவதும் ஒரு காபி ஷாப்பில் நடக்கிறது. ஒவ்வொரு காபி கபேக்கு வரும் ஒவ்வொரு நபரின் மனநிலமையை அழகாய் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாகேந்திர ராவ். இந்த படத்தை 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, இப்போ இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ரிலீஸ் ஆனது. பொருளாதார அளவில் படம் தோல்வியே என்றாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படியாக படம் உள்ளது.
தயாரிப்பாளருக்கு செலவே இல்லாமல் படத்தை எடுத்து முடித்து விட்டார் இயக்குனர். இனி கதைக்கு வருவோம்.
இயக்குனராக வேண்டும் என்று முயற்சிசெய்துகொண்டிருகிறார் நாயகன். இவரது பார்த்தவுடனே காதல் ஒரு பக்கம் செல்கிறது, கதையே எழுததெரியாமல்  முழிக்கும் நபர் ஒருவர், கணவன் மனைவி சண்டை போட்டு கொண்டு சமாதானமாக இருக்க முயற்சி செய்து கொண்டு இருவர்.
இதற்கு நடுவில் காபி ஷாப்பின் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் என பல கதைகளை ஒரே படத்தில் வைத்திருக்கிறார். அதுக்காக எல்ல கதையையும் ஒரு வரியில்ல சொல்லிட்டாரு.

படத்தில் பாடல் ஒன்றும் பெரிதாக இல்லை. முதல் பாடல் மட்டுமே ஹிட்.
இந்த படம் பார்க்குற அளவு நல்லா தான் இருக்கும். ஆனா, சில விமர்சகர்கள் ஏன் இப்படி கமெண்ட் கொடுதிருகுறாங்க http://en.wikipedia.org/wiki/Maalai_Pozhudhin_Mayakathilaey

நச்சுன்னு நாலு:
1. ஹலோ பாஸ், ஜோஷிய காரன் மதியம் 2 மணிக்குள்ள ரோட்ல கால வைக்க சொல்லிஇருக்கான்.அப்ப தான் நம்ம படம் ஹிட் ஆகுமாம்.
2. சார், டிக்கெட் தரன்னு சொல்லிடு அவர் கிட்ட வித்துடீங்க.
நான், தரன்னு சொல்லல, வேணுமான்னு தான் கேட்டேன்.
3. கேப் போடு டா. போற்றுந்தன் மச்சான். ஆனா, எப்படியு மிஸ் ஆகிடுச்சு. மேனேஜர் எத்தன தடவ சொல்லி இருக்காரு கேப் போட்டு வெளிய சுத்துன்னு(காட்சியோடு பார்க்கவும்).
4. வெளியில மழை, உள்ள குளுறு, இளையராஜா சாங் வேற, இதுல ஐஸ்கிரீம் பக்கதுள்ள பொண்ணு. செம பீலிங்க்ஸ்...
கொசுறு:
படத்தில் கதை இல்லையென்றாலும் நமக்கு ஒரு அட்வைஸ் என்று கூட எடுத்து கொண்டு இந்த படத்தை பார்க்கலாம். ஹிட் ஆகாதது வருத்தமே.

Sunday, September 09, 2012

ஏங்குகிறேன் உனக்காக


எனக்கும் எழுத பிடிக்கவில்லை

உன்னை எண்ணி ஏக்கத்தில் எழுத

எழுதுகிறேன் உனக்காக......................

வருந்துகிறேன் நீ படிக்காமல் போனால்

என் எழுத்துகளில் பிழைகள் இருக்கலாம்

நீ பிழை காண மாட்டாய் என்னிடம்

உன்னை எண்ணி எழுதுகையில்

நிறுத்தம் தெரியவில்லை என் கைகளுக்கு

மனம் யோசிக்கிறது மிகை இல்லாமல்

அவ்வளவு சிறப்பானவள் நீ எனக்கு

சிறப்புக்கள் வந்து சேரும் என்னாலும்............
 

வந்து போனவுங்க