Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, October 30, 2011


கல்நெஞ்சுக்காரி,  
கரைய மாட்டியா
உள்நெஞ்சம் இங்கு
ஊமையானது.

கண்ணுக்குள் ஏக்கம்
அது கண்ணீரின் தாக்கம்
நெஞ்சுக்குள் ஏக்கம்
இது உன்னினைவின் தாக்கம்.

கல்நெஞ்சம் ஏனம்மா
என்னை கொஞ்சம் பாரம்மா
உன்னாலே தான் நான்
பூ மனதானேன்.

உன் பூமுகம் பார்த்து
புன்னகை செய்தேன்
எனக்குள் ஏதோ
மாற்றம் தந்தாய்.

 தேன் சிந்தும் விழியை 
தினந்தோறும் பார்த்தேன்
வண்டாக ஆனேன்
காதலில் விழுந்தேன்.

தித்திக்கும் உன் பேச்சில்
நான் தத்தளித்தேன்
கரையேறும் கயிறு
உன்வார்த்தை தானே.

மல்லிகை பூவை
நீ சூடி வந்தால்
மதுரை மாநகரே
உன் பின்னால்தானே.

காதோர கம்மல்
கவிபாடும் செம்மல்
கவிக்காக தானே
இசைக்கலைஞன் ஆனேன்.

 முத்தான பற்கள் 
கற்கண்டு போலே
தித்திக்குதே,
என் நெஞ்சிலே.

பூமாலை கழுத்து
என் தோள்மீது சாய
சுமைதாங்கும் நெஞ்சம்
அசைந்தாடும் கொஞ்சம்.

வளைந்தாடும் இடுப்பு
உடுக்கைக்கு சொந்தம்
பாம்பாட்டி நானே
பார்ப்பதும் நானே.

படியேறும் உன்பாதம்
சலங்கைக்கு சொந்தம்
சலங்கையின் சத்தம்
என்வாழ்வின் அர்த்தம்...

Wednesday, October 26, 2011

தனிமை


இயற்கையை வெறுக்கிறேன்
அதன் நியதியை மறுக்கிறேன்
தனிமையை அடைகிறேன்
அந்த கொடுமையை உணர்கிறேன்

தடைகளை தகர்த்தெரிந்தேன்
தனிமை என்னை பின்தொடர்ந்தது
வந்து உதவ ஆளில்லை
எதிர்த்து நிற்கவும் ஆளில்லை

காலம் இதற்கு காரணமோ  
பாவம் நான்செய்தது, காரணமோ
மரணம்வரை இது நீடிக்குமோ
இல்லை மறுபிறவியிலும் தொடருமோ

கண் எதிரே மரணவாசல்
முடித்துக்கொள்ள புறப்பட்டேன்
சமுத்திரத்தில் பலியானேன்
உயிரினத்திற்கு விருந்தானேன்....

Tuesday, October 11, 2011

இதுதான்டா அரசியல்


வர வர நம்ம அரசியல் வாதிங்க அடிக்குற காமெடிக்கு அளவே இல்லாம போய்டுச்சு.பின்ன என்னங்க ஏப்ரல்ல ஒரு பேச்சு அக்டோபர்ல ஒரு பேச்சு பேசுறாங்க. இந்த ஆளும் கட்சியோட கூட்டணி சேர்ந்து ஒரு வருடம் கூட ஆகல அதுக்குள்ள வெளியேறி இப்ப அந்த கட்சியவே விட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்க. இதுல நம்ம கேப்டன் ஆளும் கட்சிய ஆறு மாசத்துக்கு விமர்சிக்கமாட்டோம்னு வேற பேட்டியெல்லாம் கொடுத்தாரு.இப்ப அந்த கூட்டணியே ஆறு மாசம் கூட நிலைக்கவில்லை.அந்த அம்மாவ பத்தி தெரிஞ்சும் இப்படி மாட்டிகுட்டு முளிகுறாரே.ஆளும் கட்சி மெஜாரிட்டில இருக்குறதுனால யாரு கூட்டணியும் தேவையில்லை.தே மு தி க ஒரு புறம் தனியா களம் இறங்க மற்றொரு புறம் எல்லா கட்சியும் இந்த தேர்தல தனியாவே சந்திகுறதுனு முடிவு எடுதுருக்கு.அட நம்ம தி மு க நினச்ச மாதிரியே காங்குரச கழட்டி விட்டுச்சு. போன தேர்தல்ல முட்டி மூக்க ஓடைகாம இருந்த நம்ம பம்பரம்  இப்ப களம் இறங்கிருக்கு, பார்போம் பம்பரம் சுத்துதா இல்ல சாயுதாணு. ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம வி.சி தலைவரும் மாம்பழ தலைவரு ஒன்ன வலம் வந்தாங்க.வி.சி தலைவரு கூட நம்ம ரெண்டு பேரும் ஒன்னாயுடுவோம், அப்ப கண்டிப்பாக நம்ம பலம் இந்த நாட்டுக்கே தெரியும்னு வீர வசனம் எல்லாம் பேசுனாரே அவர யாராது கண்டுபிடிசீங்கன்னா கூட்டணிய பத்தி கேளுங்க.
நம்ப மாம்பழ டாக்டர் (மன்னிக்கணும் மருத்துவர் )அய்யா நேத்து பேப்பர்ல ஒரு பேட்டி கொடுத்திருக்காரு பாருங்க, படிச்ச உடனையே சிரிப்பு வந்துருச்சு.இனிமே  பா.ம.க யாரு கூடையும் கூட்டணி சேராது,சிங்கம் சிங்குலாதான் களம் இறங்கும் அப்படின்னு சொல்லிருகாறு.அவருக்கு எதுக்கு இந்த பேச்சு அடுத்த தேர்தல்ல கண்டிப்பா அந்த பக்கம் போக போறாரு, இதுல வீண் பேச்சு பேசி நம்மல வேற கடுப்பு ஏத்துராறு மை லார்ட் .இதுல இடை தேர்தல் வேற, திருச்சி பாவுங்க எத்தன நாள் தான் இந்த கஸ்டத்தைஎல்லாம் தாங்குமோ.கிருஸ்ணசாமினு ஒருத்தர் இருக்காரு அவர் கட்சில எனக்கு தெரிஞ்சு  ஆயிரம் பேராது இருப்பாங்களாங்குறதே சந்தேகம். ஏன்னா அவர் கட்சியில் அவர் தான் தலைவர் அவர் மட்டும்தான் எம் எல் ஏ. அவரும் ஆளும் கட்சிய திட்ட ஆரம்பிச்சுட்டாரு.சட்டசபை கூட்டம் நடக்குறப்ப முதல்வரை புகழ்ந்து தள்ளுனாரே இப்ப ஏன் இப்படி.
இப்ப தான் நம்ம முக்கியமான  இடத்துக்கே வந்துருக்கோம், தி.மு.க இந்த கட்சி இப்ப பாவபட்ட நிலமைல இருக்கு, தலைவர் பேச்சை கேக்குறதுக்கு ஆளு இல்ல, பிரச்சாரம் பண்றதுக்குகூடஆளு இல்ல அட இது பரவால இடைதேர்தல்ல வேட்பு மனு தாக்கல் பண்றதுக்கே வேட்பாளர் வரலைனா பாருங்களேன்,அய்யா கொஞ்சம் வேலையா உள்ள இருந்தார் அதான் வர முடியல்ல.நேத்து பருதி இளம்வழுதி அய்யாவும் கட்சி பதிவியே வேண்டாம்னு ஒதுங்கீட்டாறு. இன்னும் கொஞ்சம் நாள்ல மிச்ச மீதி இருக்குற மாஜிங்களையும் உள்ள தள்ளாம விட மாட்டோம்னு ஆளும் கட்சி திரியுது.உள்ளாட்சி தேர்தல் நடக்குறது நாட்டுக்கோ இல்ல நமக்கோ இல்லைங்க இந்த கட்சில இருக்குற எடுப்பு துடுப்பு எல்லாம் பொலைக்குற துக்கு தான்.அடுத்த தேர்தல்ல பார்ப்போம் எல்ல கட்சியும் இதே கொள்கையுடனும் வைராக்கியதுடனும் இருபாங்கலானு...    

Tuesday, October 04, 2011

இருமனம்



கண் எதிரே வந்தாய்
காதலை தந்தாய்
காலையிலும் நீயடி
மாலையிலும் நீயடி

பௌர்ணமி பெண்ணோடு
முழுநிலவு கண்ணோடு
காதல் வயப்பட்டேன்
ஆயுள் முழுவதும் சிறைபட்டேன்

மாலை நேர சாரலில்
உன்னை நான் பார்கையில்
முன்ஜென்மம் நான் அறிந்தேன்
என் பிம்பம் நான் தொலைத்தேன்

பருவம் வந்த பெண்ணே
பரிமாற்ற வார்த்தையில்லை
முத்தமொன்று நான் கொடுத்தேன்
வெட்கத்தில் நீ திகைத்தாய்

காலம் நேரம் பார்ப்பதற்கு
நான் என்ன ஆத்திகனா
காதல் என்று வந்துவிட்டால்
கடைசிவரை நாத்திகம்தான்

மாலை நேர வேளையிலே
மல்லிகைப்பூ சூடிவந்தாய்
மல்லிகையின் மனம் முகர்ந்தேன்
மன்னவன் நான் உன் மடியிலே!!!
 

வந்து போனவுங்க