Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, October 04, 2011

இருமனம்



கண் எதிரே வந்தாய்
காதலை தந்தாய்
காலையிலும் நீயடி
மாலையிலும் நீயடி

பௌர்ணமி பெண்ணோடு
முழுநிலவு கண்ணோடு
காதல் வயப்பட்டேன்
ஆயுள் முழுவதும் சிறைபட்டேன்

மாலை நேர சாரலில்
உன்னை நான் பார்கையில்
முன்ஜென்மம் நான் அறிந்தேன்
என் பிம்பம் நான் தொலைத்தேன்

பருவம் வந்த பெண்ணே
பரிமாற்ற வார்த்தையில்லை
முத்தமொன்று நான் கொடுத்தேன்
வெட்கத்தில் நீ திகைத்தாய்

காலம் நேரம் பார்ப்பதற்கு
நான் என்ன ஆத்திகனா
காதல் என்று வந்துவிட்டால்
கடைசிவரை நாத்திகம்தான்

மாலை நேர வேளையிலே
மல்லிகைப்பூ சூடிவந்தாய்
மல்லிகையின் மனம் முகர்ந்தேன்
மன்னவன் நான் உன் மடியிலே!!!

1 comments:

  1. Very nice! those words abt "Kaalam neeran paarkka " reminded me of "sutrum vizhi chudar than kannama.." But those were the para that striked me the most too.. lovely!

    ReplyDelete

 

வந்து போனவுங்க