கண் எதிரே வந்தாய்
காதலை தந்தாய்
காலையிலும் நீயடி
மாலையிலும் நீயடி
பௌர்ணமி பெண்ணோடு
முழுநிலவு கண்ணோடு
காதல் வயப்பட்டேன்
ஆயுள் முழுவதும் சிறைபட்டேன்
மாலை நேர சாரலில்
உன்னை நான் பார்கையில்
முன்ஜென்மம் நான் அறிந்தேன்
என் பிம்பம் நான் தொலைத்தேன்
பருவம் வந்த பெண்ணே
பரிமாற்ற வார்த்தையில்லை
முத்தமொன்று நான் கொடுத்தேன்
வெட்கத்தில் நீ திகைத்தாய்
காலம் நேரம் பார்ப்பதற்கு
நான் என்ன ஆத்திகனா
காதல் என்று வந்துவிட்டால்
கடைசிவரை நாத்திகம்தான்
மாலை நேர வேளையிலே
மல்லிகைப்பூ சூடிவந்தாய்
மல்லிகையின் மனம் முகர்ந்தேன்
மன்னவன் நான் உன் மடியிலே!!!
Very nice! those words abt "Kaalam neeran paarkka " reminded me of "sutrum vizhi chudar than kannama.." But those were the para that striked me the most too.. lovely!
ReplyDelete