ஆண்: ஏம்மா கண்ணம்மா
நீ கொஞ்சம் நில்லம்மா
பெண்: ஏன்யா கண்ணய்யா
என்ன சேதி சொல்லய்யா
ஆண்: உன்னை ரொம்ப பிடிக்குமம்மா
உன்னை நான் மணக்கலாமா
பெண்: போயா பெரியய்யா
போய் பொழப்ப கொஞ்சம் பாரய்யா
ஆண்: ஏம்மா என்னம்மா
என் மீது கோபமாமா
பெண்: ஏன் மாமன் முறைமாமன்
அவன் கொஞ்சம் மோசமானவன்
ஆண்: பாரம்மா கண்ணம்மா
நான் ரொம்ப பாசமானவம்மா
பெண்: என்னய்யா சின்னய்யா
எனக்கு உன் மீது விருப்பம்தான்யா
ஆண்: ஏன்மா பிறகேனம்மா
எதற்கு இந்த பிரிவம்மா
பெண்: போயா பொன்னைய்யா
எனக்கு ரொம்ப வெட்கமய்யா
ஆண்: வாமா தாயம்மா
என் தாகத்தை நீ போக்கம்மா
பெண்: போயா பெரியய்யா
உனக்கு ரொம்ப ஆசைதான்யா.