விழியோடு விளையாடும் விளையாட்டு காதலா
உன் நினைவோடு நிழலோடு வாழ்வது காதலா
தண்ணீர் என் முன்னாடி கண்ணாடி ஆனதே
பிரதிபளிப்பது என்முகமல்ல உன்முகம்
என் இமை எதிரே உதயமானவள் நீ
என் இதயத்திலே நுலைந்தவள் நீ
திருமணம் கொள்வோமா இருமனம் சேர்வோமா
வாழ்வினில் வெல்வோமா சொல் சொல்
உலகம் வென்றாலும் உடமைகள் சேர்ந்தாலும்
வென்றவள் நீ தானே என் உயிரே
காலம் சென்றாலும் கடமைகள் முடிந்தாலும்
காதலி நீ தானே என் கனவே
என் விளைநிலத்தில் விளைந்ததெல்லாம்
பயிர்களல்ல உன் நினைவுகள்தான்
அறுவடை செய்யாமல் ஆசை இழக்காமல்
காவல் காக்கும் காதலன் நான்
பட்டு புடவை உடுத்தி வந்தாய்
என் பகல் கனவை நிகழ்த்தி வந்தாய்
விண்ணில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும்
என் உயிர் உன்னிடம் தான் அன்பே
மன்னன் நான் தானே, என் மகராணியும் நீதானே
நம் காதல் தேசத்தை ஆழ்வோமா என் அன்பே!
your lover or wife is in happy.
ReplyDeletebecause an poet get a husband. wishes to your lover or wife