Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Saturday, June 25, 2011

போராளியின் குரல்


என்ன பிழை செய்தோம்
உரிமை மறுக்கபட்டது
ஓர் இனமுண்டு மொழியுண்டு
இவற்றை ஒடுக்க ஓர் நாடுண்டு

உழைப்பால் படைத்தோம் உணவை
உண்ண உணவுண்டு உயிரில்லை
உரிமை கோரி உதைப்பட்டோம்
அறவழியில் அடிமைப்பட்டோம்

ஆயுதத்துடன் இறங்கினோம்
தலைவன் துணைகொண்டு
பகையெடுத்தான் பகையாளன்
தாய்வீடு துணைகொண்டு

நயவஞ்சகன் நுழைந்தானே
கருக்குழந்தையும் கருகியதே
பகைவனின் பணத்தைகண்டானோ
ஆதலால் முறைகொண்டானோ

போட்டானே இரசாயன குண்டை
போனதே தலைவனின் உயிர்
மானம் காக்க வந்தவனும்
மாயமாய் போனானேன்

மண்டியிட்டு உயிர் வாழும்
நாளொன்று வந்ததே
மக்கள் வாழ்வும்
கேள்விக்குறியானதே!!!

0 comments:

Post a Comment

 

வந்து போனவுங்க