என்ன பிழை செய்தோம்
உரிமை மறுக்கபட்டது
ஓர் இனமுண்டு மொழியுண்டு
இவற்றை ஒடுக்க ஓர் நாடுண்டு
உழைப்பால் படைத்தோம் உணவை
உண்ண உணவுண்டு உயிரில்லை
உரிமை கோரி உதைப்பட்டோம்
அறவழியில் அடிமைப்பட்டோம்
ஆயுதத்துடன் இறங்கினோம்
தலைவன் துணைகொண்டு
பகையெடுத்தான் பகையாளன்
தாய்வீடு துணைகொண்டு
நயவஞ்சகன் நுழைந்தானே
கருக்குழந்தையும் கருகியதே
பகைவனின் பணத்தைகண்டானோ
ஆதலால் முறைகொண்டானோ
போட்டானே இரசாயன குண்டை
போனதே தலைவனின் உயிர்
மானம் காக்க வந்தவனும்
மாயமாய் போனானேன்
மண்டியிட்டு உயிர் வாழும்
நாளொன்று வந்ததே
மக்கள் வாழ்வும்
கேள்விக்குறியானதே!!!
0 comments:
Post a Comment