யாவும் நாம் வர வீழும்
சூழும் பகைக்கு இனி ஓழும்
வீரம் பொழியவா,
தீர்க்கம் காக்கவா
என் நாட்டு விடுதலை
ஆனதோர் விடுகதை
படைக்கு அஞ்சவில்லை,
பகைமையை விரும்பவில்லை
இழப்பதற்கு சொந்தமில்லை,
எனினும் ஓயவில்லை
உறவென்று ஒன்றுமில்லை,
உடைமையும் இல்லை
வாய்பேச வழியில்லை
விழித்திருந்தும் பயனில்லை
அஹிம்சைக்கு மதிப்பில்லை
அடைப்பட்டிருக்க மனமில்லை
இனி பொருத்தும் பயனில்லை
வாழெடுத்து புறுப்பட்டேன்
அச்சமொன்று இல்லையென்று
அச்சமொன்று இருந்திருந்தால்
மாண்டிருப்பேன் அந்நாளே
போரிட்டு வென்றேன்
பதக்கமாய் மார்பினில் குண்டு
மானங்காக்க வழியில்லை
முத்தமிட்டு மடிகிறேன்
அடைகள நாட்டு மன்னை!
0 comments:
Post a Comment