Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Friday, December 09, 2011

கலுழி


சொந்தம் ஒன்று  ஏதுமில்லை
சொல்லித் தெரிய ஆளுமில்லை
பந்தம் பாசம் ஏதுமில்லை
பணம் காசு அது கிட்டவில்லை

தினந்தோறும் பசியாற்றவில்லை
பசியாற்ற உணவுமில்லை
படுத்து உறங்க பாயுமில்லை
பாவி மகன் பிறந்தேன் எதற்கோ

திக்குமுக்கு ஆடிவிட்டேன்
தினந்தோறும் தேடிவிட்டேன்
வேலை ஏதும் கிட்டவில்லை
வெளியில் யாரும் மதிக்கவில்லை

நாளும் கிழமையும் ஓடிப்போச்சு
நட்டநடு ராதிரியாச்சு
பிச்சை எடுக்க மனமுமில்லை
பிழைக்க வேற வழியுமில்லை

சாவு என்னை தள்ளி வைக்குது
சமயம் பார்த்து அழைக்க நினைக்குது
ஊரு உலகம் வெறுக்குது
பாவி மனசு தவிக்குது

இதற்கு முடிவு கிடைக்குமோ
நாளும் கடந்து போகுமோ
என்று தான் விடியுமோ
நானும் இதற்கு காரணமோ....

2 comments:

  1. உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
    இங்கு இன்னை விட்டால் பூமி எது கவலை விடு
    ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
    அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து

    ReplyDelete
  2. இதற்கு முடிவு கிடைக்குமோ
    நாளும் கடந்து போகுமோ
    என்று தான் விடியுமோ
    நானும் இதற்கு காரணமோ..
    >>
    நம்ம அறியாமைதான் காரணம்

    ReplyDelete

 

வந்து போனவுங்க