சொந்தம் ஒன்று ஏதுமில்லை
சொல்லித் தெரிய ஆளுமில்லை
பந்தம் பாசம் ஏதுமில்லை
பணம் காசு அது கிட்டவில்லை
தினந்தோறும் பசியாற்றவில்லை
பசியாற்ற உணவுமில்லை
படுத்து உறங்க பாயுமில்லை
பாவி மகன் பிறந்தேன் எதற்கோ
திக்குமுக்கு ஆடிவிட்டேன்
தினந்தோறும் தேடிவிட்டேன்
வேலை ஏதும் கிட்டவில்லை
வெளியில் யாரும் மதிக்கவில்லை
நாளும் கிழமையும் ஓடிப்போச்சு
நட்டநடு ராதிரியாச்சு
பிச்சை எடுக்க மனமுமில்லை
பிழைக்க வேற வழியுமில்லை
சாவு என்னை தள்ளி வைக்குது
சமயம் பார்த்து அழைக்க நினைக்குது
ஊரு உலகம் வெறுக்குது
பாவி மனசு தவிக்குது
இதற்கு முடிவு கிடைக்குமோ
நாளும் கடந்து போகுமோ
என்று தான் விடியுமோ
நானும் இதற்கு காரணமோ....
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
ReplyDeleteஇங்கு இன்னை விட்டால் பூமி எது கவலை விடு
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து
இதற்கு முடிவு கிடைக்குமோ
ReplyDeleteநாளும் கடந்து போகுமோ
என்று தான் விடியுமோ
நானும் இதற்கு காரணமோ..
>>
நம்ம அறியாமைதான் காரணம்