வணக்கம் நண்பர்களே. இரண்டு மாதங்களுக்கு பிறகு
இந்த பதிவை எழுதுகிறேன்.
இந்த படத்தில் யார் நடித்தது இயக்கியது போன்ற
தகவல்கள் எல்லோருக்கும் தெரியும் என்ற காரணத்தால் நாம் நேரே விமர்சனத்திற்கு
செல்வோம்.
கதை என்ன என்று பார்த்தால் கெளதம் அரைத்த மாவை
தான் திரும்பவும் அரைத்துள்ளார். ஜீவா சமந்தா இருவரும் சிறு வயது முதல் சேர்வது
பிரிவது இது தான் முழுக்கத்தை. இதை வைத்து கொண்டு ரெண்டு முக்கால் மணி நேரம் நம்மை
நிம்மதியாக தூங்க வைக்கிறார்.
ஏற்கனவே ஒரு நண்பர் என்னை விமர்சனம் என்ற
பெயரில் கதையை நீங்கள் கூறிவிடுகிறீர்கள் என்று சொன்னதன் காரணமாக இதில் நான்
படத்தின் கதையை(?) சொல்லாமல் அதன் நெகடிவ் பாயிண்ட்ஸ் மட்டும் சொல்கிறேன்.
முதலில் இந்த கதையின் கெட்டப் ஜீவாவிற்கு பொருந்தவேயில்லை.
பேசாமல் நானியே தேவலாம் என்று யோசிக்க வைக்கிறது. ஜீவா முகமுடி, மற்றும் இந்த
படத்தில் இரே மாதிரி இருக்கிறார். பழைய sms தோற்றம் தான் அவருக்கு
பொருந்தும். ஒரு காட்சியில் ஜீவா நீதானே
எந்தம் பொன்வசந்தம் பாடலை மேடையில் பாடுகிறார் அது கௌதமின் குரல். கொஞ்சம் கூட
செட் ஆகவே இல்லை.
சந்தானம் இல்லாமல்
இருந்தால் படம் ஒரு வாரம் கூட கண்டிப்பா ஓடாது என்றே சொல்லலாம். சுமாரா இருக்கு என்று
சொல்பவர்கள் கூட சந்தானதிர்காகவே சொல்வார்கள். இடைவேளைக்கு பிறகு சந்தானத்தின்
விண்ணை தாண்டி வருவாயா-௨ என்று படம் ஆரம்பமாகிறது. பிறகு படம் முடியும் வரை வெறும்
பாடல்கள் மட்டுமே.
படத்திற்கு பலம்
பலவீனம் இரண்டுமே பாடல்கள் தான். இசைஞானியின் இசை என்று மிகுந்த எதிர்பார்ப்பை
பாடல்கள் வெளியான நாளே ஹிட் ஆகி படத்தின் எதிர்பார்ப்பை எகுற வைத்தது. பின்னல்
கெளதம் கொடுத்த சில வெட்டி விளம்பரங்கள், டீசெர் என எல்லாமே கடைசியில் வேகாத
பருப்பாக மாறிவிட்டது. மூன்று மாதங்களுக்கு மேல் படத்தை ரிலீஸ் செய்யாமல்
இழுத்தடித்து ஒரு தவறு. இந்த லட்சணத்தில் இதை அடுத்த வருடம் பிப்ரவரி பதினான்காம்
நாள் வெளியிடலாம் என்ற முடிவில் வேற கெளதம் இருந்தார்(!). இடைவேளைக்கு பிறகு
சும்மா ஒரே பாட்டா வந்து கொள்ளுது. ஆடியோவில் கேட்க நல்ல இருந்தாலும் திரையில் ஏனோ
நம்மை முகம் சுளிக்கவே வைக்கிறது. இதற்க்கு கெளதம் தான் பொறுப்பு. பின்னணி இசையில்
இளையராஜா சரியாக கவனம் செலுத்தவில்லையா இல்லை கெளதம் தான் இது போன்ற tune வேண்டும்
என்று அடம் பிடித்து போட்டாரா என்ற சந்தேகம். அதுவும் சரியல்லை.
பாதி நேரம் பின்னணி இசை
இல்லாமல் ஒருபக்கம் நகர்ந்து மறுப்பக்கம் படத்தொகுப்பு மிகவும் மோசமாக உள்ளது
என்று படம் பார்த்து கொண்டிருக்கும் எல்லோரும் சொல்லும் அளவிற்கு antony சொதப்பியுள்ளார்.
ஏற்கனவே கௌதமின் வாரணம்
ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என romance படங்களை பார்த்ததால் இது மனதில் ஏனோ
நிக்க தவறிவிட்டது. dialogue delivery இயற்கையாக இல்லை. மணிரத்னம் படத்தில் வருவது
போல ஜீவா நாயகியை வர்ணிக்கும் காட்சிகள் துண்டு துண்டாக உள்ளது.
கொசுறு:
தெலுகிலும் இந்த படம் பார்த்தவர்கள்
ஒரே வரியில் ஸ்ஸ்ஸ் என்று முடித்து
விட்டனர்.
அப்ப நானி நடிச்ச தெலுங்கு படமும் அவுட்டுதானா???
ReplyDeleteபின்ன அங்கயும் ரசிகர்கள் நொந்து நூலாயிருக்காங்க
ReplyDeleteஐயோ என்னோட எதிர்பார்ர்புல மண்ணள்ளிப் போட்டுட்டாரா கௌதம். :(
ReplyDelete