Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, October 30, 2011


கல்நெஞ்சுக்காரி,  
கரைய மாட்டியா
உள்நெஞ்சம் இங்கு
ஊமையானது.

கண்ணுக்குள் ஏக்கம்
அது கண்ணீரின் தாக்கம்
நெஞ்சுக்குள் ஏக்கம்
இது உன்னினைவின் தாக்கம்.

கல்நெஞ்சம் ஏனம்மா
என்னை கொஞ்சம் பாரம்மா
உன்னாலே தான் நான்
பூ மனதானேன்.

உன் பூமுகம் பார்த்து
புன்னகை செய்தேன்
எனக்குள் ஏதோ
மாற்றம் தந்தாய்.

 தேன் சிந்தும் விழியை 
தினந்தோறும் பார்த்தேன்
வண்டாக ஆனேன்
காதலில் விழுந்தேன்.

தித்திக்கும் உன் பேச்சில்
நான் தத்தளித்தேன்
கரையேறும் கயிறு
உன்வார்த்தை தானே.

மல்லிகை பூவை
நீ சூடி வந்தால்
மதுரை மாநகரே
உன் பின்னால்தானே.

காதோர கம்மல்
கவிபாடும் செம்மல்
கவிக்காக தானே
இசைக்கலைஞன் ஆனேன்.

 முத்தான பற்கள் 
கற்கண்டு போலே
தித்திக்குதே,
என் நெஞ்சிலே.

பூமாலை கழுத்து
என் தோள்மீது சாய
சுமைதாங்கும் நெஞ்சம்
அசைந்தாடும் கொஞ்சம்.

வளைந்தாடும் இடுப்பு
உடுக்கைக்கு சொந்தம்
பாம்பாட்டி நானே
பார்ப்பதும் நானே.

படியேறும் உன்பாதம்
சலங்கைக்கு சொந்தம்
சலங்கையின் சத்தம்
என்வாழ்வின் அர்த்தம்...

5 comments:

  1. i search the meaning for "ja" in google.... now i understand why u choose this title.. wife is an another mother....

    ReplyDelete
  2. அருமை நண்பரே....

    ReplyDelete
  3. Wow.. nice.. it looks like u can tune it and play in a movie..:)

    ReplyDelete
  4. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

 

வந்து போனவுங்க