Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, December 04, 2011

அன்பே


அன்பே,
இதயம் அழைக்குதடி
உள்ளுர நினைக்குதடி
கண்ணோடு இணையடி
என் கண்கள் நீயடி

இன்பம் பெருகுதடி
உன் பின்பம் தெரியுதடி
என் சொந்தம் நீயடி
அடுத்த தாயும் நீயடி

காலமும் கடந்ததடி
இன்னும் தாமதம் ஏனடி
நிலவும் சாய்ந்ததடி
கண்ணில் தடுமாற்றம் ஏனடி
அட, பொழுதும் நமக்குச் சொந்தமடி

என் பாடலின் வரிகள் நீயடி
அதற்கு அர்த்தமும் நீயடி
காதலுக்கு மொழியும் நீயடி
என் கனவுகளுக்கு காரணமும் நீயடி

தமிழில் செய்யுள் இல்லையடி
அழகே! உன்னை வர்ணிப்பதெப்படி

உன்னை கண்டாலே திகைக்குதடி
புலவனின் ஓலைசுவடிகளடி
உன் கூந்தலில் சூடடி
பூக்களும் குடியேறத் துடிக்குதடி

குளிரில் வெப்பம் நீயடி
கங்கையின் ஓடம் நானடி
நதியில் நீராடடி
கடலில் சேரலாம் நாமடி.

2 comments:

  1. I didnt know one could write this many of romantic lines all together and call it a single verse..! very nicely done!

    ReplyDelete
  2. enanga oneside...loveah... sema feelings,,

    ReplyDelete

 

வந்து போனவுங்க