Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, February 16, 2012

வினை


பிச்ச கேட்டு திரியுரனே
ஒத்த வேளை சோத்துக்கு
பட்டதெல்லாம் போதுமடா
பைத்தியம்தான் பிடிக்குதடா

காடும் வீடும்
கையைவிட்டு போச்சு
காலம் என்னை
கடனாளியா ஆக்குச்சு

கூலி குடுத்த நேரம் போயி
கூலியாய் நின்னாச்சு
கைய கட்டி நின்னவனும்
கைநீட்டி பேசுறான்

பெத்தமக கேட்டாளே
பாசிமணி வேணுமுன்னு
வாங்கித்தர காசுயில்ல
காரணஞ் சொல்ல முடியவில்ல 

ஊதாரியா திரிஞ்சனே
ஊரு உலகம் சுத்திக்கிட்டு
பாட்டன் சொத்து கரஞ்சதும்
பட்டினிய உணர்ந்தனே...

2 comments:

 

வந்து போனவுங்க