பிச்ச கேட்டு திரியுரனே
ஒத்த வேளை சோத்துக்கு
பட்டதெல்லாம் போதுமடா
பைத்தியம்தான் பிடிக்குதடா
காடும் வீடும்
கையைவிட்டு போச்சு
காலம் என்னை
கடனாளியா ஆக்குச்சு
கூலி குடுத்த நேரம் போயி
கூலியாய் நின்னாச்சு
கைய கட்டி நின்னவனும்
கைநீட்டி பேசுறான்
பெத்தமக கேட்டாளே
பாசிமணி வேணுமுன்னு
வாங்கித்தர காசுயில்ல
காரணஞ் சொல்ல முடியவில்ல
ஊதாரியா திரிஞ்சனே
ஊரு உலகம் சுத்திக்கிட்டு
பாட்டன் சொத்து கரஞ்சதும்
kalakitinga nanba :) vattara pechu mari irukku... rasithen :)
ReplyDeleteபாராட்டுகள் .....
ReplyDelete