Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, December 19, 2011

தாகம்


மாலை வேளையில்
காதல் புரிகையில்
கண்கள் இருளையில்
இதழ்கள் சிவக்கையில்
மோகமும், தாகமும் கூடுதே!

இரவும் பகலும்
நம்மை வாட்டிடுதே!
காதல் வலியை
அது ஏற்றிடுதே!

பகலின் கொடுமை
நீங்கிடுமே!
இரவின் பசியை
அது தீர்த்திடுமே!

விடியும் தருணம்
துயல் கலைந்திடுமே!
காரணம் இன்றி
அது நடந்திடுமே!

காதல் இன்றி
வாழ்க்கை தொடங்கிடுமா!
ஊடல் இன்றி
அது முடிந்திடுமா!

போர்வைக்குள்ளே
ஒரு மயக்கம்,
உன் பார்வை பட்டாலே
அது தெரிக்கும்.

நதியில் வெள்ளம்
பெருகிடுதே,
சேரும் இடத்தில்
தொலைத்திடுதே.

இரவின் குளிரை
தனித்திடவா, நம்
இளமை பசியை
தீர்த்திடவா.

உறவின் அர்த்தம்
அது எதுவோ!
அர்த்தம் அறியவே
சேர்ந்திருப்போம்!

பூவில் வண்டு
தேன் பருக,
உன் இதழில்
முத்தம், நான் பருக..

கூந்தலை
நீ, கோதிடவே!
அதில் பூவை சூடி
நான், மகிழ்ந்திடவே!

வெட்கம் வந்து
நீ தலைகுனிய,
ஆடை சற்றே
அது நழுவ,
பாதி என்னில், நீயடி
உனது மடியில்,நானடி...

1 comments:

 

வந்து போனவுங்க