Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, July 03, 2012

அண்ணா பல்கலைகழகத்திற்கு கோடி கும்பிடு


இந்த பேருந்து சென்னையிலிருந்து, திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரைன்னு போய் கடைசியா சென்னைக்கே போயிரும். எல்லாரும் ஏறுங்க ஏறுங்க........
கல்வி என்றால் என்ன என்பதை இன்றைய அரசியல் வாதிகளிடம் தான் கேட்டு கொள்ளவேண்டும். காரணம் நாட்டில் அவர்கள் தான் படித்த, அனுபவமுள்ள திறமைசாலிகள். அவர்களுக்கு தான் தெரியும் எங்கு பல்கலைகழகம் ஆரம்பிக்க வேண்டும், எப்போது தேர்வு நடத்த வேண்டும் என்று. அழகிரி கடந்த நாடாளமன்ற தேர்தல் வாக்குறுதியில் மதுரையில் ஒரு அண்ணா பல்கலைக்கழகம் ஆரம்பிக்க படும் என்று வாக்குறுதி குடுத்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் தன்மானசிங்கம், கல்வித்தந்தை, நாடாளும் அரசன், தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற உடனே மதுரையில் ஒரூ கிளையை ஆரம்பித்தார்.(சரவண பவன் அல்ல).
ஏற்கனவே, இவர் தந்தை நான்கு துண்டாக அண்ணா பல்கலைகழகத்தை ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சரி இவர்கள் தான் இப்படி என்றால், உயர் பதவியில் அமர்ந்திருக்கும் படித்த முட்டாள்களும் ஒவ்வொரு பல்கலைகழகத்திர்க்கும் ஒரு மாதிரியான பாட முறையையும், மதிப்பெண் முறையையும் வைத்தது. இதில் கொடுமை என்னவென்றால் இன்டர்னல் மார்க்கை ரகம் வாரியாக வைத்துவிட்டார்கள். கோவையில் மற்றும் திருநெல்வேலியில் தான் தான பிரபுக்கள் அதிகம். 50 மதிப்பெண்களை வாரியிளைதுள்ளனர். சென்னையிலும், திருச்சியிலும்  20 தான். மற்ற ஊர்களை விட சென்னை மாணவர்கள் மதிப்பெண் குறைவாகவே இருக்கும்.
தற்போது, மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்ததால் சட்டசபை கட்டடத்தை மாற்றுவது போல், அண்ணா பல்கழைகத்தையும் ஒரே நிமிடத்தில் மாற்றிவிட்டார். இனிமேல் சென்னை தான் தலைமையிடம் என்று. இதனால் உள்ளே ஏகப்பட்ட கோளாறுபடிகள். இந்த வருடம் தேர்வு தேதி நான்கு முறை மாற்றியமைக்கப்பட்டது. மாணவர்களே எப்போது தேர்வு வரும் என்று குலம்பிபோனார்கள். இந்த முறை அனைவருக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்.
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், இவ்வாறு மதிப்பெண் இடுகிறார்கள் என்று இது வரை யாராலும் கணிக்கமுடியாத ஒன்று. ஒரு பாடத்தில் நன்றாக மதிப்பெண் வரும் என்று நம்பி இருந்து அதில் அர்ரியர் கூட விழும். தேறவே தேறாது என்று எண்ணிய பாடம் எப்படியோ தேறிவிடும். சில ஆசிரியர்கள் தங்களுக்கு தெரியாத பாடங்களையே திருத்தவேண்டியுள்ளது.
வேண்டுகோள்:
1. முதலில் துணைவேந்தர் பதவிக்கு பணம், ஆசிரியர்கள் நியமனத்திற்கு பணம் போன்றவை ஒழிந்தால் தான் நிலைமை மாறும்.
2. தகுதியில்லாத ஆசிரியர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்.
3. தனியார் கல்விநிறுவனங்களின் பகல் கொள்ளையை தடுக்கவேண்டும்.
4. நிகர்நிலை பல்கலைகழகங்களை ஒழிக்கவேண்டும்.(காரணம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருந்தால் தான், ஆரோக்கியமான கல்விமுறை அமையும்)
5.        செய்முறை தேர்வு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இன்னும் நிறையாக உள்ளது, பொறுப்பில் உள்ளவர்களோ அல்லது மாணவர்கள் மீது அக்கறை உள்ளவர்களோ கேட்டால் நிச்சயம் முழு திட்டத்தையும் தெரிவிக்குறேன்.(அனைத்தும் இலவசம், நன்கொடை பெறப்படமாட்டாது).


5 comments:

  1. Yow pinnata ya...

    SATIRE nu aangilathulla solluvanga la, athukku meaning ah intha post ah podalam...
    rasithen sirithen :)

    karuththa nachunu solirikinga !

    ReplyDelete
  2. ungalala mattum epadi CM ippadi mudiyuthu

    ReplyDelete
  3. @UYAR KALVI AMAICHARமாண்புமிகு உயர் கல்வி அமைச்சருக்கு நன்றி..

    ReplyDelete
  4. @Thiyagarajan B டேய் என்னையும் அரசியல் வாதி ஆக்காதே.

    ReplyDelete
  5. கோடி கும்பிடு பத்தாது நண்பரே...

    ReplyDelete

 

வந்து போனவுங்க